27.5.11

போதுமடா சாமி

வலையுலக நண்பர்களே,

தேர்தல் முடிந்து விட்டது. புதிய ஆட்சி வந்து விட்டது. அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகுங்கள். ஏறக்குறைய ஆறு ஏழு மாதங்களாக 2 G  - இதே நடந்து கொண்டிருக்கிறது. இப்போது கிளைமாக்ஸ்.

கலைஞரின் கண்ணீர் கடிதம் - கனிமொழியின் பரிதவிப்பு - இன்னும் எல்லாப் பத்திரிக்கைகளும், எல்லா வலைகளும் இதையே எழுதிக் கொண்டிருக்கின்றன. எப்போது இது முடியும் என்று தெரியவில்லை? அவர்களின் குற்றங்களுக்கு அவர்கள் அனுபவிக்கிறார்கள். அவர்கள் அனுபவிக்கட்டும். அதை விட்டு விட்டு இன்னும் அதையே நாம் மீண்டும் புரட்டிப் போட்டு ஒன்றும் ஆவப் போவது இல்லை. இதில் என்னவென்றால், ஏறக்குறைய - 'நடுநிலையோடு' எழுதிக்கொண்டிருக்கிற வலைப் பதிவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நபர்கள் எல்லாம், இன்னும் அதே ரோதனையைப் பாடிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் மீது வாசிப்பாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகிறது என்பதை ஏன் நினைக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

 இதில் எல்லாருமே பாதிக்கப் பட்டிருக்கிறோம் - இந்திய நாட்டின் குடிமகன்கள் என்கிற விதத்தில். எனவே தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தெல்லாம் இல்லை. உப்பத் தின்னவன் தண்ணி குடிச்சுத்தான் ஆகணும்.

இந்த வழக்கு நீதி மன்றத்தில் இருக்கிறது. இந்த வழக்கு வாய்தா போட்டு வாய்தா போட்டு இழுத்தடிக்காம இருக்கிறதுக்கு என்ன பண்ணணுமோ அதைப் பண்ணலாம். ஆனால் அதை விட்டுட்டு, கலைஞர் கண்ணீர் வடித்தார் - அது நீலிக் கண்ணீர். அடுத்தா நாள், கட்டாந்தரையில் படுத்தார் கனி மொழி - இதே பொழப்பா.
இங்கே யாரு பொது நலத்தோடு வேலை செய்யுறது. எல்லாரும் சுய நலம்தான். சிலருக்கு பண ஆசை - சிலருக்கு புகழ் ஆசை. எல்லாரும் அப்படித்தான்.
எனவே அடுத்த கட்ட முயற்சியில் இறங்குவது உத்தமம் என்று படுகிறது.

இப்படி தொடர்ந்து அதைப் பற்றியே எழுதிக் கொண்டிருப்பது, நமக்குள் ஒரு கிளர்ச்சியை, அக்களிப்பை, மனதுக்கு நிறைய சந்தோஷத்தைத் தருகிறது. மவனே அனுபவிடி... நீ ஆடுனப்ப ஒன்னும் பண்ண முடியலை - இப்ப என் வஞ்சத்தைத் தீர்க்க அதைப் பற்றியே எழுதுகிறேன்னு எழுதிக்கிட்டே இருக்கோம். இது நமக்குதான் நல்லதில்லை. அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்காம வஞ்சம் தீர்ப்பது நல்லதில்லைன்னு மனதுக்குப் படுது. அதனால இதைப் பத்தி மறந்துறணும் அப்படின்னு சொல்லலை. அதைப் பற்றிய தொடர்ச்சி தேவை. ஆனால் அது மட்டுமே அப்படின்னு இருக்கிறது யாருக்கும் எதுவும் செய்யாது.

பெட்ரோல் விலை ஏறுது. எதுவும் மாற்றம் அடைந்தது போல தெரியலை. இது எங்க போயி முடியும்னு தெரியலை.
அரசியல் அதிகாரிகள், போலிசை ஏவிவிடும் காலம் இருக்கும் வரை, அரசியல் பலம் உள்ளவன் கையில் பதவி இழந்ததால், பலம் இழந்தவன் மாட்டுவான். அதுதான் அரசியல் உலகில் நியதி.


அப்படி அந்தக் கண்ணீர்க் கதையையே பேசிக் கொண்டிருப்பது இன்றைய ஆட்சி செய்வதை எல்லாம் நியாயப் படுத்தும் விதமாகவே இருக்கும். 

தலைமைச் செயலகத்தை பயன் படுத்தக் கூடாது ஏனெனில் கலைஞர் கட்டினார். சமச் சீர் கல்வி முறை தடை செய்யப் பட்டது. ஏனெனில் அதில் கலைஞர் வரலாறு மற்றும் செம்மொழி மாநாடு பற்றிய குறிப்பு உள்ளது. எனவே அதைத் தடை செய்வது நியாயம். யாரும் எதுவும் கேட்கமுடியாது. நாம் வளர்த்துவிடுவோம், அப்புறம் ....

கலைஞர் டாஸ்மாக்கை வளர்த்துவிட்டார்னு அதைத் தடைசெய்தாவது நல்லா இருக்கும். மக்கள் கொஞ்சம் பணக் கஷ்டம் இல்லாம வளர்ந்து போற விலைவாசில வண்டிக்காவது பெட்ரோல் போடலாம்.

போதும்டா சாமி!

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்