8.5.10

அரசியல் பூகம்பம்

தொலைத்தொடர்பு விவகாரம் முற்றிப் போய் கிடக்கிறது.

அரசும், அதிகாரமும், பணமும் அதோடு குடும்பமும் சேர்ந்தால் என்ன ஆகும்?
நேர்மையான அரசியல் வாதிகள் யாரும் இல்லை என்பதனால் - இருப்பதில் எது நல்லது என்று பார்த்துப் பார்த்து நமக்கும் இவைகளெல்லாம் பழகிப் போய் விட்டது.

சுண்டல் விற்பவனில் தொடங்கி கிண்டல் செய்கிறவன் வரையில் எல்லாரிடத்திலும் உண்மை என்பது அவர்களுக்குச் சாதகமாக பார்ப்பதிலும் பேசுவதிலும்தான் இருக்கிறது.

இதெல்லாம், நமது அரசியல்வாதிகள் நமக்குச் செய்திருக்கிற நன்மைகள். உண்மை என்றால் என்ன - எப்படி ஒன்றை உண்மையாக்கலாம் - எப்படி உண்மையை பொய்யாக்கலாம் - எப்படி ஒன்றை உருவாக்கலாம் - நடந்ததையே நடக்கவில்லை என்று எப்படி சொல்வது - எங்கே எப்போது எந்த அஸ்திரத்தைப் பயன்படுத்துவது -

கலைஞருக்கே வெளிச்சம்.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்