26.7.11

விபத்துகள் - அணு உலை - தீவிரவாதம்

  • அணு உலை பற்றிய பல விவாதங்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வருவதாய் இல்லை.
    • வளர்ச்சியடைந்த நாடுகள் தங்கள் தொழிழ் நுட்பத்தால் எதையும் சாதித்து விட முடியும் என்ற மமதையோடு இருந்தவர்களுக்கு வரிசையாக ஒன்று மாற்றி ஒன்று வந்து கொண்டே இருக்கிறது. ஜப்பானில் ஆரம்பித்தது - நில நடுக்கத்தால் வந்தது வினை. சில ஐரோப்பிய நாடுகள் முழித்துக் கொண்டன. ஜெர்மனி அதில் முதல் நாடாய் தெரிவித்தது. இத்தாலியில் மே மாதம் நடந்த பொது வாக்கெடுப்பில் மக்கள் அணு உலைக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். [பொது வாக்கெடுப்பு எல்லாம் நம் ஊரில் நடக்குமா என்ன?] ஆனால் நாம் இப்போதுதான் அணு ஆயுத ஆலை அமைப்பதில் தீவிரமாக இருக்கிறோம். மிகவும் தரமான பொருட்களைத் தேர்ந்தெடுத்து, மக்கள் வசிக்காத பகுதிகளை தேர்ந்தெடுத்து  என்று .... பல வழிகளில் திட்டமிடும் அந்த நாடுகளே ஒதுங்கிப் போக வழி தேடும் போது நாம் இன்று எப்படித் திட்டமுடியும் என்பதை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டியிருக்கிறது?
  • இரயில் விபத்துக்கள் 
    • உலகத்தில் மிக நீளமான பாலத்தை கடல் மீது கட்டியிருக்கும் சீனாவில் நேருக்கு நேராக ரயில் மோதியிருக்கிறது. இந்தியாவில் இது நிறைய நடக்கிறது. என்ன அங்கே புல்லட் ரயில் மீது விபத்து நடக்கிறது. இங்கே இன்னும் நூறு கிலோமீட்டர் வேகத்தில் போகிறதே ரெகார்டாக இருக்கிறது. அப்படி இருந்தும் இங்கே விபத்துகள் பல்கிப் பெருகுவது எதனால்?
  • தீவிரவாதம் 
    • ஆண்டேர்ஸ் ப்ரைவிக் - ஏறக்குறை என்பத்தி ஐந்து பேரை தனி ஆளாக தேடித் தேடி சுட்டுக் கொன்றிருக்கிறான், கடந்த வெள்ளிக் கிழமை. 'ஐரோப்பிய நாடு பல பண்பாடுகளை உள்ளடிக்கிய நாடுகளாக மாறிக் கொண்டிருப்பதாகவும், ஐரோப்பிய நாடுகள் தங்களது தேசிய, பண்பாட்டு அடையாளங்களை இழந்து வருவதாகவும்' கூறி தனது கொலைகளுக்கு காரணம் கற்பித்து இருக்கிறான். இதன் மூலம் ஈழ அமைதிப் பேச்சுவார்த்தை மட்டுமல்ல, மிகவும் அமைதியான நாடு அனைவருக்கும் ஆதரவு கொடுக்கும் நாடு என்று எண்ணப்பட்ட நாட்டில் இது நடந்திருக்கிறது. தொடர்ந்து மும்பையில் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு எந்தத் தீவிர வாத அமைப்பு காரணம் என்று தெரியவில்லை ஆனால் ஒவ்வொரு குண்டு வெடிப்பிலும் இழப்பு இரண்டு பக்கத்திற்கும்தான். 
இதனால் அறிவது என்னவென்றால்

- நம்மிடம் அணு உலை எதிர்ப்பு எப்போது வருமென்றால் நாம் அணு உலை அமைத்து அதில் விபத்துகள் வந்து அதனால் மிகப் பெரிய இழப்புகள் வந்தால்தான் நாம் அணுஉலை எதிர்ப்பு என்பது நமக்கெல்லாம் கனவாகும்.
- முன்னேறிய நாடுகளைப் போல தொழில் நுட்பத்தில் முன்னேறி முன்னூறு கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் போனால்தான் எப்போதாவது விபத்து ஏற்படும். இல்லையெனில் இப்போது போல அடிக்கடி ஏற்படும்.
- நாமும் நார்வேயைப்போல ஏற்கனவே அமைதியான நாடு என்று பெயர் எடுத்திருப்பதானால், இங்கேயும் தீவிர வாதம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனை இங்கே அரசியல் வாதிகளும் வளர்க்கிறார்கள்.

முடிவாக ...

  • முதலாவது நிகழ்வில் இயற்கையின் சதியினால் மக்கள் உயிரிழக்கிறார்கள் 
  • இரண்டாவது நிகழ்வில் , நமது கவனக்குறைவால் மக்கள் உயிர் இழக்கிறார்கள் 
  • மூன்றாவது நிகழ்வில் நமது அறிவீனம், திமிர், இவைகளினால் உயிர் இழக்கிறோம். 
    • ஈஸ்ட் அல்லது வெஸ்ட் எலாம் ஒரேமாதிரிதான் - சின்ன வித்தியாசம்... அது நமக்கே தெரியும்.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்