2.9.10

உலகத்தின் நோக்கம் 4

நமக்கு நாமே சிலவற்றைக் கற்பித்துக் கொள்வோம்.
சில சரி பல தவறு என்று அர்த்தம் கற்பித்துக் கொள்வோம்.


சிவப்பு விளக்கில் சாலையைக் கடக்கக்கூடாது.
கடந்தால் தவறு என்போம்.

அதற்கு அடுத்த நிலையில் தவறு என்பதைத் தாண்டி
அதைக் குற்றம் என்போம்.
குற்றத்தைக் கண்காணிக்க காவலர்களை நியமிப்போம்.


நமக்கு நாமே இவைகளை எல்லாம் கற்பித்துக் கொள்வதனால்
நமக்கு முன்னிரிமை தர வேண்டும்:
எனவே நமக்கு உரிமை உண்டு என்பதையும் வலியுறுத்தி,
நாம் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க நீதிமன்றங்களை ஏற்படுத்துவோம்.

உரிமையை நிலை நிறுத்தியது போலவும் ஆச்சு குற்றங்களை குறைத்தது போலவும் ஆச்சு.

பின் என்ன செய்யலாம் - எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவும்,
எல்லாரும் சமமாக மதிக்கப் படவும் வேண்டி அரசுகளை ஏற்படுத்துவோம் அல்லது அரசுகளின் வழி காவல்துறையையும் நீதிமன்றங்களையும் ஏற்படுத்துவோம்..


நாம் தனி மனிதர்கள் தான் ஆனாலும் நாம் விலங்குகளிலிருந்து மாறுபட்டு வாழ நாம் இந்த சமுதாய வாழ்க்கை முறைக்குள் ஒப்பந்தம் செய்து கொள்வோம்.

இதைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை.

நான் நன்றாக இருக்க வேண்டும்.
அதற்காக இவைகளை உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

அவ்வளவுதான் - இந்த உலகம் என்பது ஒன்றுமில்லாதது -
அதை நான் படைத்துக் கொள்கிறேன்.

சிக்கல்கள் -

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் - எது சரி தவறு என்பதை யார் நிர்ணயம் செய்வது?
எதனடிப் படையில் நிர்ணயம் செய்வது?


சரி தவறு என்பதை நமக்குள்ளேயே தேடுவோம். இயற்கை நமக்கு கொடுத்திருக்கிற வரத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்வோம்.

மகிழ்ச்சி நமது வாழ்க்கைக்குத் தேவை - எனவே அதன் அடிப்படையில் சரி தவறை நிர்ணயம் செய்வோம்.


இதிலும் சிக்கல் என்னவென்றால் -
குறிப்பிட்ட ஒன்றுதான் எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாக மகிச்சியைக் கொடுக்கும் என்று சொல்லிவிட முடியாது.
எனக்கு எது இன்பம் தருமோ அது உங்களுக்கு இன்பம் தராது.
அப்ப எப்படி எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாக இது சரி தவறு என்று சொல்வது?


பெரும்பான்மையான மக்களுக்கு எது இன்பம் தருமோ அதை சரி என்போம்.

மற்றதை தவறு என்போம்.


ஆனால் நாம் தனி மனித உரிமையையும் வலியுறுத்துகிறோம்.


எனவே எனக்கு ஒரு பெண்ணோடு வாழ்வது இன்பம் தரவில்லை பல பெண்களோடு வாழ வேண்டும் என்றால் அதைத் தவறு என்றோ மனித நோக்கத்திற்கு எதிரானது என்றோ சொல்லிவிட முடியாது - ஏனெனில் நோக்கத்தை நாம்தான் படைத்தோம் ஆனால் - உரிமையை நிலை நிறுத்தவும் வேண்டும்.


அல்லது தனது வாழ்க்கையை தானே முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஒருவன் முடிவு செய்தால் - அதுதான் இன்பம் என்றால் என்ன செய்வது -


ஒரு ஆண் இன்னொரு ஆணோடு வாழ்வதுதான் எனக்கு மகிழ்ச்சி என்றால் அதைத் தவறு என்றும் சொல்ல முடியாது.
எந்த நோக்கத்தை வைத்து அதைத் தவறு என்று சொல்ல முடியும்?
முடியாது.

அப்ப அதையும் சரி என்போம்.



ஒட்டு மொத்தமாக எல்லாரையும் வெடி வைத்துக் கொள்வதுதான் எனக்கு இன்பம் என்றால் - அதுவும் தவறா?

கவன ஈர்ப்புக்காகவும் எங்களது கோரிக்கைகளை சரி என்று என்றுக் கொள்ளவும் இப்படித்தான் செய்தாக வேண்டியிருக்கிறது என்றால் அதுவும் சரிதானே?


அப்ப இப்படி மாற்றி வைத்துக் கொள்வோம் -



மனித குலத்தை அழிக்கும் அனைத்தையும் தீவிரவாதம் என்றும், தவறு என்றும் சொல்லி அதை மிகப் பெரிய குற்றம் என்போம்.



மனித குலத்தை அழிப்பதா?


திருமணம் என்பது ஒரு நிறுவனம் - நாம் ஏற்படுத்தியது.
ஓரினத்திருமணம் சரி - அதுவும் நாம் ஏற்படுத்தியது -

abortin செய்வதும் சரி.
ஏனெனில் அது தனி மனித உரிமை.



மரங்களை அழிப்பதும் சரி - ஏனெனில் அதுவும் நாம் இன்பமாக வாழ செய்கிறோம்.

கரியமில வாயுவை அளவுக்கு அதிகமாக வெளிப் படுத்தி வெப்பத்தை அதிகரித்துக் கொண்டோம்.
என்றாவது இப்படித்தான் ஆகும் அதனால் அது தவறில்லை என்கிறோம்.


இது தொடர்ந்து நடந்தால் உலகமே இருக்காதே அப்புறம் எப்படி மனித குலம் இருக்கும்.


இதெல்லாம் நமக்குச் சரியெனப் படுகிறதா

மேலும்.. 







0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்