வெறி பிடித்து
செத்த பிணத்தை
சுட்டுத் தள்ளும் சூரர்கள் போல,
புஸ்வானத்தைக் கூட
அணுகுண்டை வைப்பது போல
பார்வையிலேயே பிரளயம் செய்யும்
அவன் நண்பர்களை
ஒரு வாரமாய் பார்த்து
அழுது அழுது
வீங்கிப் போன முகத்தோடு
அவன் இருந்தான்.
பட்டாசு வாங்கினால்
சோறு தின்ன முடியாதே என
அவன் அம்மா
அரிசியையே வாங்கினாள்.
வேறு வழியே இல்லை
பிரளயத்தை வேடிக்கையாவது பார்ப்போமே
என்று வெடிக்கும் இடம் போனான்
அவன் கன்னத்தில்
வினையாய் வந்தது ஒரு வெடி.
அவசரமாய் அவனை
ஆஸ்பத்தரி தூக்கிப் போக
அனாதையாய்
கிடந்தது
அரிசி...
0 comments:
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்