27.10.12

சூப்பர் சிங்கர் ஜூனியர் த்ரி - ஆஜித் - விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

எனக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நிச்சயமாய் சூப்பர் சிங்கர். இந்த முறை ஜூனியர் என்பதனால் இன்னும் அதிகமான நெருக்கம்.
குழல் இனிது யாழ் இனிது என்பர் மழலைச் சொல் கேளாதவர் ... 
அற்புதமான குழந்தைகளின் குரல்களில் ஏற்கனவே கேட்ட பாடல்கள் கூட இன்னும் இனிதாகவே இருந்தது.

பைனலில் திரு. ஏ. ஆர். ரகுமான் அவர்கள் முன்னிலையில், தம்பி அஜீத் வெற்றி பெற்றது நிச்சயமாய் அவனுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும். உண்மையில் வெற்றி பெறுவதற்கான நபர் அவர்தான் என்றே நான் கருதியிருந்தேன். அப்படி இல்லையென்றாலும் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றே கருதியிருந்தேன். ஏனெனில் டாப் ஐந்தில் வராதவர் பைனலில் வெற்றி பெற்றால் தானே ஒரு கிக்.

என்னதான் குரல்களின் மயக்கம் நம்மை யோசிக்க விடாமல் செய்தாலும் நம்மால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை... விஜய் தொலைக் காட்சி தனது சில்மிஷங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. கடந்த முறை அதிக எஸ் எம் எஸ்கள் பெற்று சாய் வெற்றி பெற்றார் என்று மட்டும்தான் சொன்னது. இந்த முறையும் அதே போல அதிக வாக்கு என்னிக்கையில் இவர் வெற்றி பெற்றார் என்றுதான்  சொன்னார்கள். இந்த முறை வைல்ட் கார்டில் எண்ணிக்கை சொன்னவர்கள் பைனலில் எண்ணிக்கைகளைச் சொல்ல வில்லை.  இருந்தாலும் கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை ரிசல்ட் சரியாக இருந்தது போலவே தோன்றியது - இருந்தாலும் சில கேள்விகள் இல்லாமல் இல்லை.

ஏற்கனவே மூன்று இந்து தம்பி தங்கைகள் பைனலில் சேர்ந்து விட்ட பிறகு வைல்ட் கார்டில் இருந்து பைனலில் வர வேண்டியது ஒரு இஸ்லாமிய மற்றும் கிறித்தவ குழந்தை.... அது அப்படியே நடந்தது.  இப்படித்தான் நடக்கும் என்பதை நான் எதிர் பார்த்திருந்தேன். என் நண்பர் ஒருவரிடம் அதைப் பற்றி முண்பே சொல்லியிருந்தேன். அது அப்படியே நடந்ததைப் பார்த்த பிறகு ஒன்று  ஜோசியம் சொல்லலாம் அல்லது ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சி நடத்தும் தகுதி எனக்கு இருக்கிறது என்பதை நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது.   இது போல எத்தனை பேர் பெருமைப் பட்டிருக்கிறிர்களோ, யாருக்குத் தெரியும்? 
வைல்ட் கார்டில் இருந்து பைனலுக்கு வரும் நபர்களுக்கு வாக்குகள் அதிகம் பெற வாய்ப்பு இருக்கிறது. அது நேரடியாக பைனலுக்கு நுழையும் நபர்களுக்கு இல்லை.  காரணம் நிறைய இருக்கின்றது. 

இந்த முறை நிச்சயமாய் சுகன்யாவும் கவுதமும் ஒழுங்காக பாட வில்லை. இருவரின்  வாய்சும்    ஒத்துழைக்க வில்லை என்பது மட்டுமலாமல் பல இடங்களில் சுருதி சேர வில்லை என்பதும் உண்மை. உண்மையிலேயே சுருதி சேரவில்லையா சேர விட வில்லையா என்பது தெரிய வில்லை. மிகவும் கடினமான பாடல்களையே தேர்ந்தெடுக்கும் சுகன்யா இந்த முறை கொஞ்சம் இலகுவான பாடலையே தேர்ந்தெடுத்தது போலவே இருந்தது. சரி ...அப்படியே அவர்கள் மிக நன்றாகப் பாடி இருந்தாலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே தோன்றியது...  இது எப்போதும் நடப்பது தானே. அடுத்த முறையில் இருந்து முதலில் நேரடியாக பைனலுக்குத் தேர்ந்தெடுக்கப் படும் நபர் நிச்சயமாய் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே யோசிப்பார் இப்போது சுகன்யா யோசித்துக் கொண்டிருப்பதைப் போல.

வழக்கம் போல திரு மனோ அவர்கள் ஏதாவது சொல்லி அவர்கள் எதையும் கணக்கு பண்ணுவதில்லை என்பதை நமக்குத் தெளிவு படுத்திக் கொண்டுதான் இருக்கிறார். 
ஒவ்வொரு முறையும் யாராவது வெளியேற்றப் படும் போது புள்ளி ஐந்து மதிப்பெண்களில் தான் வெளியேறி இருக்கிறார்கள். அதற்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ பெற்று யாரும் உள்ளேயும் இல்லை வெளியேவும் போகவில்லை.  அப்படித் தான் திரு மனோ அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த ரவுண்டில் இந்த இடத்தில் சுருதி சேரலை .. உங்கள் இரண்டு பேரில் நீ இதில் சரியில்லை... அதில் சரியில்லை என்று யாரும் சுட்டிக் காட்டுவதில்லை. ஆனால் மதிப்பெண்கள் மட்டும் புள்ளி. ஐந்துதான் வித்தியாசம் இருக்கும்.
அது எப்போதுமே பொய் என்பதை அவராக மைக்கைப் புடுங்கி பைனல் மேடையில் பேசி மீண்டும் நிருபித்து விட்டார். அதாவது - அஜூத் மற்றும் பிரகதி இருவரும் அனைத்து நடுவர்களிடமிருந்து ஒரே மதிப்பெண்களைப் பெற்றதாகவும், எஸ். எம். எஸ் களில் மட்டும் புள்ளி ஐந்து மதிப்பெண் கூடப் பெற்று ஆஜித் வெற்றி பெற்றதாகவும் திரு. மனோ சொன்னது தாங்கள் ஏற்கனவே இது போல ஒவ்வொரு வாரக் கடைசியிலும் சொன்னது உண்மையில்லை என்பதை நிருபித்து இருக்கிறார்.

அந்த புள்ளி பாதி எஸ். எம். எஸ் அனுப்புன அந்தப் புண்ணியாவான் யார்ன்னு தெரிந்தா அந்த மாதிரி பாதி எஸ். எம். எஸ். எப்படி அனுப்பு றதுன்னு சொன்னா நல்லா இருக்கும். ஒருவேளை அவரே புள்ளி. ஐந்து எஸ். எம். எஸ். அனுப்புனாரோ என்னவோ.

என்னதான் உள்ளே அரசியல் நடந்தாலும் இந்த நிகழ்ச்சியின் அடுத்த பாகத்தைப் பார்க்க மாட்டேன் என்கிற உறுதியை மட்டும் என்னால் வழங்க முடியாது. இசைக்கு மயங்காதவர்கள் யாரவது உண்டா... என்ன?

****************************************************

ஆனால் இந்த முறை இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களை ஊமைப் படம் பார்க்க வைத்த பெருமை விஜய் டிவிக்கே சேரும். இதை தெரியாமல் நடந்த பிழையாகக் கருத முடிய வில்லை. 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…[பதிலளி]

...ம்... அவ்வப்போது மின்சாரம் இருக்கும் போது தான் பார்க்க முடிந்தது...

அஜித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

நன்றி...

பெயரில்லா சொன்னது…[பதிலளி]
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…[பதிலளி]

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com/upcoming.php

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்