11.12.11

ஒய் திஸ் கொல வெறி?ஜஸ்ட் ஜாலியா ஒன் ...


மனதில் எண்ணம் ...
கையில் ... 
ஒன்லி இங்க்லீஷ் - 
ஒ.கே . மாமு....
மைண்ட்ல தாட்டு - 
ஹாண்ட்ல கீ போர்ட்  
வாட் டு ரைட்டு நவ்வு .... ன்னு தான் 
இந்தப் பதிவ ஆரம்பிச்சேன். 
ஆனா நம்மால முடியாதுடா சாமி.
***

இந்தப் பாட்டு வந்து பல விஷயங்கள் நடந்து விட்டது.
படத்தின் - ப்ரமோவுக்காக தனுஷ் ஜாலியா ஒரு பாட்டுப் பண்ணி ....
- என்ன விஷயம்னா நம்ம விஜய்  பாடினா  இப்போது பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய் ன்னு நம்மைக் கொன்னே போடுவாங்க... இவரை நேராவே காட்டிட்டாங்க...
***
ஒய் திஸ் கொல வெறி பாட்டு வந்த நேரத்துல விலை வாசி ஏறிப் போய் எல்லாரும் அம்மா மேல கடுப்புல இருந்த அன்னைக்கு [அன்னைக்குதான் நான் பார்த்தேன்] இந்தப் பாட்டு வந்து எல்லாரும் அம்மாவைத் திட்டுற மாதிரி ஒரு தலைப்பைப் போட்டு, திருப்பித் திருப்பிப் போட்டுக் கேட்டு, 
அம்மாவைப் பார்த்து எல்லாரும் ஒய் திஸ் கொல வெறின்னு கேட்டாங்களாம்.
***

திருப்பித் திருப்பி போட்டுக் கேட்டதுல கடுப்பாகி ஒய் திஸ் கொல வெறி - உங்களுக்கு என்னாங்கடா வேணும் - இந்தாங்கடா 
தங்க மெடல் ன்னு யு டியூப் குடுத்து 
அதோட முடிச்சுக்கலாம்னு பார்த்தா...

அதே மேட்டரை அதே மெட்டோட அல்லாரும் திருப்பித் திருப்பி, சின்னவன், பொண்ணு ன்னு மாத்தி மாத்தி பாடி - என்னா எடிட்டிங்க்டா சாமி. சீக்கிரம் பாலைக் குடுங்கடா தூங்கனும்கிற ரேஞ்சுக்கு அந்தப் பொடியன் பாட - எனக்கென்னமோ அந்தப் பையன் அவங்க அம்மாவைப் பார்த்துதான் 
ஒய் திஸ் கோல வெறின்னு பாடுற மாதிரி இருக்கு.
***

ஒருத்தர் தனுஷ் ஏன்  தமிழில் எழுதலைன்னு ரொம்பக் கஷ்டப் பட்டு 
ஏன் இந்தக் கொல வெறி ... கொல வெறின்னு ....
கஷ்டப் பட்டு மொழி மாற்றம் பண்ணி - அதுல ஸ்ருதிக்கு பதிலா ஒரு பொண்ண  நடிக்க வச்சு ----உஷ் அப்பப்பா ஏன்யா இந்தக் கொல வெறி.
***

என் டி டிவி வரைக்கும் தனுஷ் பேட்டி குடுத்து
வி ஆர்  ஹியர் டு என்டர்டெயின் யு நோ.... 
அப்படின்னு விளக்கம் குடுத்துருக்கார். 
ஒய்? ஒய் திஸ் யா?
***

சிம்பு ரசிகர்கள் எல்லாம் தனுஷை வெறுப்பேத்துற மாதிரி பேச - வெறுப்பேத்துற மாதிரி என்னை விட என்னடா அவரைப் பத்தி அதிகம் பேசுகிறீர்கள் என்று தன் ரசிகர்களுக்கு ஒய் திஸ் கொலை வெறி ன்னு சொல்லி -  நீங்க பேசாம இருங்க நான் பாத்துக்கிறேன் அப்படின்னு சொன்னாராம்.

என்னாடா பண்ணப் போறாருன்னு பார்த்தா டி ஆரையும் எல். ஆரையும் வச்சு ஒரு பாட்டு பண்ணி -....
டி. ஆர் . சார் அண்ட் சிம்பு சார் 
ஏன்  இந்தக் கொல வெறி?
***

கவிஞர்கள் (!) கடுப்பாகி இதெல்லாம் ஒரு பாட்டான்னு தனுஷைக் கிண்டல் பண்ணி  ஒய் திஸ் கொல வெறின்னு கேட்கப் போய்.

என் மேல் உங்களுக்கு ஏன்யா இந்தக் கொல வெறின்னு கடுப்பாகி - தனுஷ் இசைக்கு மொழி தேவையில்லை - அது என்ன மொழின்னு தெரியணும்னா தெரிஞ்சுக்க இந்தா ...  "இந்தியனால் எழுதப்பட்ட இந்திய மொழின்னு" டுவீட் பண்ணி, ....

அடேங்கப்பா ... ஏன் எல்லாருக்கும் இந்தக் கொலைவெறி...
ஆமா எனக்கு ஏன் இந்தக் கொல வெறி?

ஒரு வழியா தனுஷ்ல ஆரம்பிச்சு தனுஷ்ல முடிச்சுட்டேனா?

இதனால் அறிவது என்னவென்றால்.....
  • இந்திய மொழி என்று ஒன்று உண்டு.... அது இங்கிளிபிஷு

***************************************************************************
  • கேரளாவில்  எல்லாரும் சேர்ந்தது தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கூடாது என்பதில் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக இருக்கிறார்கள். அங்குள்ள கிறித்தவப் பாதிரியார்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளுகிறார்களாம். தமிழ் நாட்டில் இருந்து சபரி மலைக்குச் சென்ற தமிழக பக்தர்கள் மீது அவர்களின் வண்டிகளின் மீது தாக்குதல் நடத்தியதால் பக்தர்கள் சிலர் இங்கேயே முடி இறக்கவும் முடிவு செய்தார்களாம். பரமண்டல பிதாவும் சாமி ஐயப்பனும் ஒன்று சேர்ந்து தாக்குதல் கொடுக்கிறார்களா? சாமிகள் பேரைச் சொல்லி வம்பு வழக்கும் ஆசாமிகளே ஒய் திஸ் கொல வெறி?
    • யார் சொன்னது நமது நாட்டில் மத வேறுபாட்டினால் பிளவு என்று? 

      • இத்தனைக்குப் பிறகும் சில தமிழர்கள் கட்டாயம் அங்கே போய்தான் முடி இறக்க வேண்டும் என்று முடிவோடு இருக்கிறார்களாம். ஒய்? ஒய் திஸ் கொல வெறி?



9 comments:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]

கேரளாவின் மத நல்லிணக்கம் வாழ்க எண்ணத்தை சொல்ல நம்ம ஆளுங்களை...!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…[பதிலளி]

ம் ...

Prem S சொன்னது…[பதிலளி]

கொலைவெறி பற்றிய உங்கள் அலசல் கொலைவெறியல்ல இனிய பொறி நன்றி

Unknown சொன்னது…[பதிலளி]

@MANO நாஞ்சில் மனோ
வணக்கம் மனோ,
நல்லிணக்க வாரம் - ன்னு சிறப்பு செய்வோம்.

Unknown சொன்னது…[பதிலளி]

@நண்டு @நொரண்டு -ஈரோடு
சரி,
நன்றி.

Unknown சொன்னது…[பதிலளி]

@சி.பிரேம் குமார்

கவிதை அருமையா இருக்கு.
நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…[பதிலளி]

அருமை!
பகிர்வுக்கு நன்றி நண்பரே!

ராஜா MVS சொன்னது…[பதிலளி]

நல்ல அலசல்...

N.H. Narasimma Prasad சொன்னது…[பதிலளி]

ஏன் இப்படி. ஒய் திஸ் கொலைவெறி நண்பா?

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்