23.7.10

இணையாக் கோடுகள் பிரிக்கும் உயிர்கள்


உலகின் மிகப்பெரிய இரயில்வேத்துறையில் தொடர்ந்து விபத்துகள் - 

லாலுவிற்குப் பிறகு வந்த ரயில்வே அமைச்சரின் கவனக் குறைவா அல்லது லாலுவின் காலத்தில் எல்லா இடங்களிலும் பணியில் நிரப்பப் பட்ட  பீகார் நண்பர்களின் கவனக் குறைவா – அல்லது இவர்களின் எப்போதையக் கவனக் குறைவையும் மீறி இரயில்கள் விபத்தில்லாமல் தப்பிக்கின்றனவா - நமக்குத் தெரியாது.

ஆனால் நம் அரசுக்கும் ஓட்டுனர்களுக்கும் உயிரின் மதிப்பைப் பற்றி கவலை இல்லை என்பது மட்டும் தெரிகிறது. விபத்து நடந்தவுடன் அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள் – திடீர் சோதனை – கூட்டங்கள் – விபத்து நடந்தவுடன் சில ஆயிரங்கள் இறந்தவர் குடும்பத்துக்கு – பிறகு யார் குற்றவாளியோ அவர் சஸ்பென்ட் – அப்புறம் ஒரு விசாரணைக் குழு – அதன் முடிவு வருவதற்குள் அடுத்த விபத்து – சில அவசர சட்டம் – சில நாட்களுக்கு கெடுபிடி – பிறகு வேறு ஏதாவது பிரச்சனை – அதற்கான விசாரணைக் குழு – கொடுமை சார் ...

மனித உயிர் அவ்வளவு கேவலமானதா? நிற்கின்ற இரயிலில் எவனாவது மோதுவானா  - சிவப்பு விளக்குகள் என்ன ஆனது? – ஒரு நிலையத்தைக் கடக்கிற போது ஓட்டுனரின் கண்கள் முன்னே இருக்க வேண்டாமா? நாம் எல்லாவற்றையும் “take it for granted” – என எடுத்துக் கொள்கிறோம். என்னை நம்பி இத்தனை உயிர்கள் இருக்கின்றன என்பதை ஓட்டுனர், நிலைய இயக்குனர், ... ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பு பற்றி உணர வேண்டாமா? 

தங்கள் மேல் அளவுக்கு மீறிய நம்பிக்கை. எல்லாம் ஒழுங்காக நடக்கும் – எல்லோரும் கடமை உணர்வோடு பணியாற்றுகிறார்கள் – எல்லோரும் கவனமாகக் கடமை உணர்வோடு இருப்பார்கள் – எல்லாம் சரிதான் ஆனால் ஓட்டுனர்கள் மட்டும் எப்போதும் தன்னைத் தவிர வேறு யாரும் கடமை உணர்வோடு பணியாற்றுவது இல்லை என்று தான் எண்ண வேண்டும் – இதைத் திமிர் என்றாலும் பரவாயில்லை – தான்மட்டும்தான் கவனத்தோடு வண்டி ஓட்ட வேண்டும் வேறு யாரும் கவனத்தோடு வண்டி ஓட்டுவதில்லை என்றுதான் நினைக்க வேண்டும் – இதைக் கொழுப்பு என்றாலும் பரவாயில்லை – கடமை உணர்வும் பொறுப்புணர்வும் நிமிடம் அதிகரிக்காத வரை சாலைகளாகட்டும். தண்டவாளங்களாகட்டும் விபத்துக்கள் என்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் –

தெரியாமல் நடப்பதுதான் விபத்துகள் – தெரிந்தே நடந்தால் ...

தொடர்புடைய கட்டுரைக்கு கீழே சொடுக்கவும்.

சாலை மரணம் நவீனக் கொடை


"ஒரு வார" நோய் 

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்