24.5.11

'நால் வழி' மயானம் - இது விதியா?

  • தமிழக அரசின் சுற்றுலாத் துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சாலை விபத்தில் காலமானது மிகவும் துரதிர்ஷ்ட வசமானது. கடந்த அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கே.என். நேருவைத் தோற்கடித்த மரியம் பிச்சை சாலை விபத்தில் இறந்தது விதியின் செயலா என்று தெரியவில்லை.
  • ஒரு மனிதர் இறந்திருக்கும் போது அஞ்சலி செலுத்துவதைத் தாண்டி வேறு ஒன்றும் பேசாமல் இருப்பதே நாகரிகமாக இருக்கும். ஆனால் இதே போல தினமும் பல பேர் சாலை விபத்துகளில் இறந்து கொண்டிருக்கும் போது நாம் மௌனமாய் இருப்பது மனிதாபிமான செயலாக இருக்காது என்பதால் இதைப் பற்றி இந்த நேரத்தில் பேச வேண்டியிருக்கிறது.
  • கடந்த வருடம் மே மாத இறுதியில் என் நண்பர் ஒருவர் சாலை விபத்தில் இறந்தார். அதற்கு முன்பு பெங்களூரிலிருந்து சென்னைக்கு வேகமாக வந்தால் மூன்று மணி நேரத்திலும், கொஞ்சம் மெதுவாக வந்தால் மூன்றரை மணி நேரத்திலும் வரும் மற்றொரு நண்பர் இறந்தார். ஒருமுறை ப்ரார்த்தனாவில் 'இம்சை அரசன்' பார்க்க அடையாறு சிக்னலில் இருந்து கிளம்பி போனபோது அவரது வேகத்தில் நமக்கு மட்டுமல்ல வெளியிலிருப்பவர்களுக்கும் இம்சைதான். ஆனால் ஒரு த்ரில்லிங் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவர்கள் இறந்த போது செய்வதறியாது நிற்கும் மனைவி, குழந்தைகள் இவர்களைப் பார்க்கிற போதுதான் மனம் செய்வதறியாது இருக்கிறது. த்ரில்லிங் எல்லாம் சுக்கு நூறாய்ப் போய் விடுகிறது. 
  • கடந்த வருடம், அந்த வேதனையில்தான் 'சாலை மரணம் நவீனக் கொடை' என்று எழுத வேண்டி வந்தது. மீண்டும் இந்த ஆண்டு அதைப் பற்றியே பேச வேண்டியிருக்கிறது.  இன்று தினமணி தலையங்கத்தில் - நால்வழிச் சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் எல்லாம் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்குப் பதில் நிறைய வேலையின்மையைத் தான் உருவாகியிருக்கிறது என்று எழுதியிருக்கிறார்கள். நாள் வழிச் சாலைகளினால் பயனே இல்லையா என்றெல்லாம் இல்லை. நமக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றுதான் பொருள். 
  • வழுக்குசாலைகள். முன்பு முதல் நாள் இரவு பேருந்து எடுத்தால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு மேல்தான் சென்னைக்கு வந்து சேருவோம். அது படிப் படியாய் நேரம் குறைந்து இப்போது எவ்வளவு நேரத்தில் போகும் என்ற நேரத்தையே பேருந்துகளில் விளம்பரமாய் எழுதி வைத்து விடுகிறார்கள். ஆனால் நால்வழிச் சாலைகளில் பயங்கரத் தடைகள். ஒவ்வொரு ஊருக்கு நடுவிலும் குறுக்குச் சாலைகள். ஒரு பக்கமே செல்ல வேண்டிய சாலைகளில், சொந்த ஊரின் நண்பர்கள் பெற்றோலை சேமிக்க அதிலேயே எதிர்ப் புறம் வர, மாடுகள் குறுக்கே வர, டிராக்டர்கள் திடீரென முளைக்க, டாங்கர்கள் படீரென வளைக்க - இவைகளையெல்லாம் தாண்டி நான்கு நான்கரை மணி நேரத்தில் சென்னைக்குச் செல்லும் ஓட்டுனர்களின் வீரம் தான் தினம் தினம் நாள் வழிச் சாலையை மயானமாக்கிக் கொண்டிருக்கிறது. 
  • எத்தனை எத்தனை விபத்துகள்? ஓட்டுனர் உரிமம் இருக்கான்னு செக் பண்றாங்களே - அவனுக்கு ஓட்டுனர் உரிமம் ஒழுங்காக வழங்கப் படுகிறதான்னு செக் பண்றாங்களா? 
  • கம்பியூட்டரை எதுக்குப் பயன்படுத்துரான்களோ இல்லையோ போலி உரிமம் வழங்க நிறையப் பயன் படுத்துகிறார்கள். இருநூற்றி ஐம்பது ரூபாய்க்கு உரிமம் வழங்கும் DTP சென்டர்கள் சென்னையில் நிறைய இருக்கின்றன.
  • மஞ்சள் கோடு, இடைவெளியிட்ட வெள்ளைக் கோடுகள், இடைவெளியில்லா வெள்ளைக் கோடுகள் இதற்கெல்லாம் என்ன அர்த்தம்னு எத்தனை ஓட்டுனர்களுக்குத் தெரியும் என்பதே பெரிய கேள்விக் குறிதான். 
  • indicator இல்லாத வண்டிகள்தான் அதிகம் - அப்படியே இருந்தாலும் அதைப் பயன்படுத்துவது இல்லை. எப்படிப் பயன்படுத்தனும்னு தெரியாது. வலது பக்க இண்டிகேட்டரை வலது பக்கம் திரும்பவும் பயன்படுத்துகிறார்கள், பின்னால் வரும் வண்டியை முன்னே போக அனுமதிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இவன் எதுக்குப் போடுறான்னு பின்னாடி வர்ற வண்டிக்கு எப்படிப் புரியும்? அவன் என்ன கடவுளா? நம்மை போகச் சொல்றான்னு பின்னாடி வர்றவன் முன்னாடிப் போக, முன்னாடிப் போறவனும் வலது பக்கம் திரும்ப அப்புறம் என்ன 'சங்குதான்.'
  • லேன்கள் உள்ள சாலைகளில் மெதுவாகப் போகிறவன் இடது பக்கம்தான் போக வேண்டும் - அப்போதுதான் overtake பண்றவன் அடுத்த லேனில் போக வசதியாக இருக்கும் - ஏனெனில் ஓட்டுனர் இருக்கை வலது புறம் தான் உள்ளது. ஆனால் இங்கே மெதுவாப் போறவன் வலது பக்கம் போறான் - எப்படி ஓவர்டேக் பண்ண முடியும் - அதுக்குத் தான் வண்டிக்கு கிளீனர் வேற... அப்பா சாமி...
  • நால்வழிச் சாலை என்பதால் வழுக்கிக் கொண்டு செல்லளாம்னு லேட்டகக் கிளம்புவது - அப்புறம் ஓட்டுனரைக் குறை சொல்லவும் கூடாது.  நேரத்தோடு கிளம்பி முன்பே போய் சேருவோம் என்கிற எண்ணம் இல்லாமல், லேட்டாகக்க் கிளம்பி மொத்தமாய்ப் போய்ச் சேருவதுதான் வழக்கமாய் இருக்கிறது. 
  • ஓட்டுனர்களின் உணர்வு கட்டுப் பாடு என்பதும் இல்லாமல் போய் விட்டது. யார் மேலயாவது கோபம்னா அதை வண்டி ஓட்டும்போதுதான் காண்பிக்கிறோம். சைக்கிள் gap பில் ஆட்டோ ஓட்டுற ஆட்கள் தான் அதிகம். 
  • இப்படி இருக்கிற போது வெறும் சாலைப் பாதுகாப்பு வாரம் ஒன்றும் செய்துவிட முடியாது. விதியாய்க் குறை சொல்லக் கூடாது - இது மதியின்மைதான். இதைப் பற்றி யாரும் எதுவும் செய்துவிடப் போவது இல்லை.
  • ஒட்டுனராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் விபத்தை ஒழிக்க முடியாது. 

தொடர்புடைய பழைய கட்டுரைகள்:

சாலை மரணம் - நவீன கொடை

இணையாக் கோடுகள் பிரிக்கும் உயிர்கள்

 


    0 comments:

    கருத்துரையிடுக

    பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்