14.1.13

பொங்கல் வாழ்த்துகளா!


  • இந்த ஆண்டு வரிசையாய் புத்தாண்டு விழாக்கள். ஒன்று மாற்றி ஒன்று. முதல் புத்தாண்டு கடந்த டிசம்பர் 22 - ஆம் தேதி தொடங்கியது.  - மாயனில் மயங்கிப் போனவர்கள் கொண்டாடிய புத்தாண்டு அது. அதன் பிறகு உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடினார்கள்.  என்ன வித்தியாசம் என்றால், மாயன் காலண்டரின் ஆண்டுக் கணக்கு உலகம் முழுவதும் தெரிந்து விட்டது. அதனால் உலகம் முழுவதும் கொண்டாடினார்கள். ஆங்கிலப் புத்தாண்டும் உலகம்  முழுதும் கொண்டாடப் பட்டது. ஆனால் தமிழ் புத்தாண்டை தமிழர்கள் கூட கொண்டாட மாட்டார்கள். நமக்கு இன்னும் தை தானா - ஆண்டின் தொடக்கம் என்கிற கேள்வியே முதலில் வந்து நிற்கிறது.
  • எதுவாய் இருந்து விட்டுப் போகட்டும் பொங்கல் கொண்டாடுவதில் தமிழர்கள் ஒன்றிணைந்தால் நல்லதுதானே!
  • நண்பர் ஒருவர் முகநூலில் பின்வரும் கருத்தை சொல்லியிருந்தார். இந்தியா முழுவதும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு பலியான பிறகு இந்தியா முழுவதும் பத்திரிக்கைகள் அதை டெல்லிக்கும் உலகத்திற்கும் கொன்று சென்றது. ஆனால் ஈழத்தில் இறந்த ஆயிரக்கணக்கான உயிர்கள் டெல்லியைக் கூட எட்ட வில்லை.  
  • அது எப்படி எட்டும்? தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகள், கூடங்குளம் எதிர் நோக்கும் அபாயம், வரிசையாச் சுட்டுக் கொள்ளப்படும் தமிழ் மீனவர்கள் இவர்களைப் பற்றிய செய்தியைக் கூட வெளியிட மறுக்கும் தமிழ் பத்திரிக்கைகள், அல்லது இந்தியப் பத்திரிக்கைகள் இருக்கும் வரை, அது எங்கும் சென்று சேராது. ஒரு மீனவன் இறந்தால் அவன் தமிழ் மீனவன். இறந்தால் அவன் தமிழன். தமிழ் நாட்டு தமிழனைப் பற்றியே கவலைப் படாத டெல்லி எப்படி ஈழம் பற்றிக் கவலைப் படும்?
  • உழும் நிலம் வறண்டு நிற்கிற போது , இந்திய நீதி மன்றம் வரையறுத்து இருக்கிற தண்ணீரைத் தருவதற்குக் கூட கர்நாடகம் மறுத்து நிற்கிற அவலம் இந்த டெல்லியை எட்டாது. எட்டா உயரத்தில் இருக்கும் டெல்லியை ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால், வடிவேலு சொல்லுவது மாதிரி - இங்க இருக்குற தமிழ் நாட்டை எடுத்து அப்படியே டெல்லி பக்கத்துல வச்சுட்டா ரொம்ப சுலபமாக் கேட்கும்.
  • பொங்கல் கொண்டாடுவோம்.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்