25.6.10

தமிழ் மாநாடு

ஒரு நீண்ட பெரிய விடுமுறைக்குப் பின் தொடர்ந்து எழுதுவது குறித்து சிறிய மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

பலர் மத்தியில் இந்த உலக தமிழ் மாநாடு பெருத்த அலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இது போன்ற எந்த ஒரு மாநாடும் - மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியாது என்றாலும், காலப் போக்கில் எதையாவது செய்து விடாதா என்ற எதிர் பார்ப்பு ஒன்றைத் தான் இந்த மாநாடு செய்துவிட முடியும்.

முதலில் செய்ய வேண்டியது தமிழ் தமிழகத்தில் முதலிடம் பெற முடியுமா என்பதுதான். அதைச் செய்தாலே மிகப் பெரிய சாதனைதான்.

எல்லாப் பலகைகளும் முதலில் தமிழில் பெயர் தாங்கினால் போதும்.
தொலைக் காட்சி நிகழ்வுகளை நடத்துபவர்கள் தமிழில் பேசினால் எப்படி இருக்கும். - அசிங்கமா இருந்தாலும் ஒரு நல்ல தொடக்கமா இருக்குமல்லவா?

நாம் எழுதுவதிலும் பெசுவதுளும் மிகப் பெரிய சாதனையாளர்கள் தான்.
மாநாட்டில் எடுத்த தீர்மானங்களை நடைமுறைப் படுத்தினாலே போதுமானது. தமிழில் கையெழுத்து இடுவதும் தமிழில் பேசுவதும் நன்றாக இருக்கும்.

ஒன்றும் நடைமுறைப் படுத்த வில்லை என்றால் - செம் மொழி என்று சொல்லலாம் - அம்மொழி இருந்தது என்று சொல்லலாம் - அவ்வளவுதான்.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்