18.6.12

குப்பை அள்ளேல்


சென்னையின் அக்கினி பிரவேசம் முடிந்து - பள்ளிக்கரனை புகை மண்டலப் பிரவேசம் அதிகமானதில் சென்னை முழுவதும் குப்பைக் கூளங்கள் எல்லா வீதிகளிலும் இருக்க அது மிகப் பெரிய பிரச்சனையாகிப் போனது. 

இந்த எப்.எம் ரேடியோக்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த குப்பைக் கூளங்களுக்கு யார் காரணம் என்று மாத்தி மாத்தி கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணிட்டாங்க. அதுல நிறையப் பேரு காரணம் நாமதான் - எல்லாரும் பொறுப்பில்லாம ரோட்டில குப்பை போடுறோம். சின்னப் பிள்ளைகளை  பொறுப்பா வளக்கிறது இல்லை. நமக்கு சிவிக் சென்ஸ் இல்லைங்கிற ரேஞ்சுங்குப் பேசுறாங்க.

சிவிக் சென்ஸ் உள்ள ஐயாக்களே, நடு ரோட்டில குப்பை கிடந்தா சரி.. இந்த நாட்களில் குப்பை கிடப்பது குப்பைத் தொட்டிகளில் . அவைகள் நிரம்பி அதில் போடுவதற்கு இடமில்லாமல் அதன் அருகில் வைத்த குப்பைகள் தான் மலை போல் குவிந்து இருந்தன. அதில் உணவுப் பண்டங்கள் மக்கி புதிய உயிரினங்கள் உருவாகி எவலூஷன் சரி என்று வாதித்துக் கொண்டிருந்தன... நாற்றம் மக்களை அந்தப் பாதையில் கூட அனுமதிக்க வில்லை. 

புதுக்கோட்டை இடைத் தேர்தலுக்காக முப்பத்தி இரண்டு அமைச்சர்கள் தான் சென்னையைக் காலி பணிவிட்டதாகக் கேள்வி. அதென்ன முனிசிப் பாலிட்டி ஊழியர்களும் புதுக்கோட்டைக்குச் சென்று விட்டார்களா?

இப்ப நமது மக்கள் எல்லாரும் அரசை விட்டுவிட்டு நம்மை நாமே குறை சொல்ல ஆரம்பித்து விட்டோம்.  அரசில் உள்ளவர்கள் என்னதான் செய்கிறார்கள் ?

வாரத்துல மூணு நாலு நம்ம ப்ரைம் மினிஸ்டர் "பண வீக்கம்" மிகுந்த கவலை அளிக்கிறது அப்படின்னு சொல்றார். இதை நம்ம சொன்னா சரி பதிவில இருந்துகிட்டு அவர் சொல்லலாமா ? ஒருவேளை பண வீக்கம் நமக்கு சிவிக் சென்ஸ் இல்லாததால்தான்  பணத்தின் மதிப்புக் குறையுதோ?

--- புதுக்கோட்டையிலிருந்து ஊழியர்கள் திரும்பி வந்து விட்டார்கள் போல! சிலை சாலைகள் மிளிர்கின்றன ---

நண்பர்களே ...
 வந்துட்டேன்! வந்துட்டேன்! வந்துட்டேன்! 
இன்னும் இரண்டு மாதங்களுக்கு கொஞ்சம்  நேரம் கிடைக்கும் என்று கருதுகிறேன். 
நல்லா இருக்கிங்களா?