17.12.11

என் கழுகுப் பார்வை - 2011 ஒன்று



தரை வழி நின்று ஒரு இடத்தைப் பார்ப்பதற்கும் 
ஒரு மலை மீது நின்று அதே இடத்தைப் பார்ப்பதற்கும் 
நிறைய வித்தியாசம் இருக்கும். 
கீழிலிருந்து பார்க்கும் போது அழகாக இருக்காது என்பதல்ல விஷயம் - 
[அழகு என்பதை ஒரு வரையறைக்குள் கொண்டு வரமுடியாது] -
மேலிருந்து பார்க்கிற போது 
சிறிய நுணுக்கங்கள் தெரியாது என்பதும் அல்ல விஷயம்.

மேலிருக்கிற பார்வையில் - 
விசாலப் பார்வையோடு, 
வித்தியாசமான பரிமாணம் வெளிப்படும்.

சென்னையைத் தாண்டி - வேறு இடங்களில் இருபது கிலோ மீட்டரை இருபது நிமிடத்தில் பைக்கில் கடக்கிற நபர் முதல் முதலாய் சென்னை டிராபிக்கில் முழி பிதுங்கி இரண்டு கிலோ மீட்டரை கடக்க இருபது நிமிடங்கள் ஆகிற போது - அங்கே சுற்றியிருக்கிற கட்டிடங்களோடு சேர்ந்து - அந்த நபருக்கு ஆகா சென்னை எவ்வளவு பெருசுன்னு தோணும்.

வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்தில் இறங்கும் போது பார்க்கிற சென்னை - அட இவ்வளவுதானா சென்னைன்னு தோணும்.
ஆனால் அது கொடுக்கிற விசாலப் பார்வையைத் தரை கொடுத்து விட முடியாது.

கடலோரத்தில் இருக்கும் அந்த கட்டங்களின் நடுவே நமக்குத் தெரிந்த இடங்கள் இவளவு அருகில் இருக்கிறதா என்று தோன்றும். ஒரு வழிப் பாதை அல்லது சுற்றிச் சுற்றிச் சென்று சில இடங்களின் தொடர்புகள் கூட இல்லாதது போல நம்முடைய எண்ணம் மாறும்.

நிகழ்வுகள் சில அவ்வப் போது நடக்கிற போது நடக்கிற நிகழ்வுகள் தொடர்பற்றவைகள் போலத் தோன்றும். ஒவ்வொரு நிகழ்வையும் தனியே மட்டுமே பார்க்கச் சொல்லும்.

சில மாதங்கள் கழித்து 
சில நிகழ்வுகளை 
கொஞ்சம் தொலை தூரத்தில் இருந்து பார்க்கிற போது 
அவைகளின் வேறு பரிணாமங்கள் நமக்குத் தோன்றும்.

இந்த ஆண்டு நடந்த சில நிகழ்வுகளையும் 
அப்படிப் பார்க்கலாமென்று தோன்றுகிறது. 
அவை சில விஷயங்களை நமக்குத் தெளிவு படுத்தலாம் 
அல்லது சிக்கலுக்கு உள்ளாக்கலாம். 
எனக்குத் தெரிய வில்லை. 

இது சில பகுதிகளாக வெளி வரும். 
இது எனது கழுகுப் பார்வை மட்டுமே! 
தங்களது பார்வைகளையும் சேர்க்கிற நண்பர்கள் 
தங்களது கருத்துக்களையும் வெளியிடலாம்.

உதாரணத்திற்கு ஒன்று

இந்த ஆண்டு 
கேரளா மகர ஜோதி ஏமாற்று வித்தையில் ஆரம்பித்து, 
கேரளா  முல்லைப் பெரியாறு ஏமாற்று வித்தையில் முடித்திருக்கிறது. 
வருடம் முடியப் போகிறது -
ஏமாற்றும் வித்தைகள் முடியுமா தெரியாது.

தொடரும்....

3 comments:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]

கேரளம் கடவுளின் தேசம் அல்ல, அது எத்தர்களின் தேசம்....!!!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…[பதிலளி]

நல்ல அலசல்! உண்மை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."

ஊரான் சொன்னது…[பதிலளி]

வித்தைக்காரர்களை வீழ்த்தாத வரை ஏமாற்று வித்தைகளும் தொடரும்.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்