13.9.16

காவு வாங்கும் காவிரி

ஆற்றுக்கு அணை 
வயலில் மனை
 தீராத வினை

அவன் ஆற்றில் அணை போடுகிறான் 
நாம் வயலில் மனை போடுகிறோம்.


அவனுக்கு உணவு தேவை - எனவே ஆற்றில் நீர் பதுக்குகிறான்.
 நமக்கு மனை தேவை எனவே ஆற்றில் மணல் எடுக்கிறோம்.

அவன் அணை கட்டி நீரைத் தேக்குகிறான்.
நாம் நீர் தேங்க இடமில்லாமல் மனை  காட்டுகிறோம்.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் 
ஆற்றுக்கு அணை 
என்பது அதோடு முடிந்து விடுவதல்ல 

அதைத் தொடர்ந்து 
காற்றுக்கு வேலி யும் வரும்.

நாம் குளம் அழித்து 
மணல் எடுத்து,
மனை கட்டி 
வாழ வரும் போது 
மரமும் இருக்காது 
மழையும் இருக்காது

காற்றுக்காயும் 
கையேந்தும்  
காலம் வரும்.

ஆற்றுக்கு அணை 
வயலில் மனை
 தீராத வினை


1 comments:

bernard சொன்னது…[பதிலளி]

It is very true that we are creating desert for our future generations because of our selfishness. We are the destroyers of humanity and ecology. God alone can help us

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்