2.5.11

இணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்


எல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா நாடுகளிலும், ஏதாவது கிராமம் இணையத்திற்கு அப்பாற்பட்டுதான் இருக்கிறது.

அப்படி ஒரு கிராமத்தில் வருடத்திற்கு ஒருமுறை, நான்கைந்து நாட்கள் குடியிருக்க முடிவு செய்தால் மிக நன்றாக இருக்கும். அப்படி இணைக்கப்படாத கிராமத்தின் அழகும், மாசு படாத எழிலும், எந்த நாடாக இருந்ததாலும், மனத்தைக் கிறங்க வைக்கும்.

அப்படியே இல்லாவிட்டாலும், இணையத்தால் இணைக்கப்படாமல் இருக்க நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் பார்க்கும் எந்த நகரமும் திடீரென்று வேறு விதமாகத் தோன்றும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, எப்போதும், கணினியை இயக்கிக் கொண்டிருக்கும் கைகளும், மிக முக்கியமானதென்று நினைத்துக் கொண்டு எழுதும் இ-மெயில்களும், மொக்கைக் கட்டுரைகளும்...

இதெல்லாம் இல்லாமல், கைகளும் மனதும் சிறகடித்துப் பறக்கும் அனுபவத்தை எல்லாரும் அனுபவிக்க வேண்டும்.
உங்கள் blog- கிற்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள் அப்படியே முடியுமெனில், இ-மெயிலிற்கு சில நாட்கள் விடுமுறை விடுங்கள். இன்னும் முடியுமென்றால், ஒட்டு மொத்தமாக கணினிக்கு ஒரு வாரம் ஓய்வு கொடுங்கள்.

கணினிக்கும் கணினிக்கும் உள்ள இணைப்பைத் தாண்டி, இயற்கையின் இணைப்பில் இணைந்தால் அதனால் வரும் சுகம் தனிதான். மனதோடு பேசும், இயற்கையின் குரல் நம்மை வெகுவாய் ஈர்க்கும்.

உலகம் பெரிதாய் ஒன்றும் மாறிவிடாது. நாம் எதையும் இழக்கப் போவதும் இல்லை. இணையத்தின் இணைப்பிலிருந்து விடுபட்ட இந்த மூன்று வாரங்கள் எனக்கு இனிதாய் இருந்தன. இந்த அனுபவம் எல்லாரும் பெற வேண்டும்.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்